பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது.
அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு 2025.06.21 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும், மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை, நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடைய, எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும்.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை தேவையுள்ள நோயாளிகளுக்காக மேலும் விரிவுப்படுத்த அர்ப்பணிப்போம் – ஜனாதிபதியின் செயலாளர்
மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு இன்று (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிரதேச மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கு அமைவாக, மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் மேற்படி விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி நிதிய செயல்பாடுகள் குறித்த நடைமுறை அறிவை மேலும் வழங்குவதற்காக இந்த சிறப்பு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில், அரச ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த தொடர்பாடல்களை எவ்வாறு கட்டியெழுப்புவது மற்றும் அதனை பேணுவது என்பது குறித்து ஜனாதிபதி ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார விளக்கமளித்தார்.
மேலும், கணினி கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, மருத்துவ உதவி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதிலிருந்து அனுமதிப்பது வரையிலான செயல்முறை குறித்த விளக்கக்காட்சி, ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் பொறுப்பான ஜனாதிபதி நிதிய, அதிகாரிகள் உட்பட பணிக்குழுவினரால் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவின் செயல்பாடுகளையும் கணினி கட்டமைப்புடன் சரிபார்த்தல், அனுமதிக்கு பின்னர் மருத்துவ உதவிகளை வழங்குதல் செயல்முறை மற்றும் கணினி கட்டமைப்பில் பணிபுரியும் போது விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நடைமுறை மற்றும் ஒழுங்குமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
மிகவும் தேவையுள்ளவர்களுக்கு சேவைகளை வழங்குவதே ஜனாதிபதி நிதியத்தின் முக்கிய நோக்கம் மற்றும் எண்ணக்கருவாகும் என்றும், தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நிதியத்தின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அதிகமான மக்கள் சேவைகளை எளிதாகப் பெற முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, சுட்டிக்காட்டினார்.
இந்த சேவையின் மதிப்பை அனைத்து அரசாங்க அதிகாரிகளும் புரிந்துகொண்டுள்ளனர் என நம்புவதாகவும், மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரினதும் ஆதரவு தேவை என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.
ஜனாதிபதி நிதியிலிருந்து ஆண்டுதோறும் பெறப்படும் பணம், தேவை உள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும், தேவை உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் மேம்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நோயாளிகளால் பிரதேச செயலகங்கள் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் கணினி கட்டமைப்பில் உள்ளீடு செய்யப்பட்டிருப்பதாகவும். மேலும், இந்த விண்ணப்பங்களில் 40% மேல் மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே சுட்டிக்காட்டினார்.
2025.02.07 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்களுக்கு விரிவு படுத்தும் செயல்பாட்டின் கீழ் தற்போது பெறப்படும் விண்ணப்பங்களில் 80%, பிரதேச செயலகங்கள் மூலமாகவே பெறப்படுவதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தப் செயலமர்வில் பங்கேற்ற பிரதேச செயலகங்களின், விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்களான பீ.எச். கொலம்பகே, பீ.ஆர். பிரசாத் பெரேரா, ஜனாதிபதி நிதியத்தின் தலைமை கணக்காளர் டீ.ஏ.எம். விக்ரமரத்ன, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் உஷானி ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய பணிக்குழுவினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபர் சார்பாகவும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படுவதோடு அந்தப் பணம் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் வாழ்ந்த திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனாகொடுவ, படுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வனாதவில்லுவ, சிலாபம், புத்தள, தனமல்வில, வெல்லவாய மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இந்த நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவி வழங்க நிதியத்தின் தலைவர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுரை.
உயிரிழந்த 21 பேருடைய குடும்பங்களின் நலன்புரிதலுக்காக, ஒரு நபருக்கு 10 இலட்சம் (ரூபாய் 1,000,000.00) அடிப்படையில் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 499 ஆம் இலக்க ஜல்தர கிராம அலுவலர் பிரிவில் உள்ள மருத்துவ உதவிப் பெறுபவருக்கு, கொழும்பு மாவட்டத்திற்கான பிரதிநிதியாக, ஹோமாகம பிரதேச செயலக அதிகாரிகளின் பங்கேற்புடன், முதல் கொடுப்பனவு 28.03.2025 அன்று வழங்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தின் பரவலாக்கல் செயல்முறை தொடர்பாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி இப்போது அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை மேலும் வசதியான முறையில் பெற முடியும்.
மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும் – www.presidentsfund.gov.lk
ஜனாதிபதி நிதியின் பரவலாக்கத்திற்குப் பிறகு, முதல் ஜனாதிபதி மருத்துவ உதவிக் கொடுப்பனவு இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத பிரதேச செயலகப் பிரிவில் 27.03.2025 அன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், பிரதேச செயலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவ உதவி பெறுபவரின் வீட்டிற்குச் சென்று, தேவையான மருத்துவ உதவியை வழங்கினர்.
ஜனாதிபதி நிதியத்தின் பரவலாக்கல் செயல்முறை தொடர்பாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி இப்போது அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை மேலும் வசதியான முறையில் பெற முடியும்.
மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும் – www.presidentsfund.gov.lk
மக்களுக்கு மிகவும் இலகுவான சேவைகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி நிதியமானது பிரதேச செயலாளர் அலுவலகங்கள் வரை பரவலாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இப்போது அனைவரும் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பித்து பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் தங்களது பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் பெறலாம்.
இதுகுறித்த தகவல்களை எங்கள் சமூக ஊடகத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிடப்படும். மேலதிக தகவல்களுக்கு கீழ்காணும் தொடர்பு வழிகளை பயன்படுத்தலாம்.
அஞ்சல் மூலம்:
செயலாளர், ஜனாதிபதி நிதியம்,
ஸ்டாண்டர்ட் சார்டட் கட்டிடம்,
ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01.
மின்னஞ்சல் மூலம்: prefund@presidentsoffice.lk
WhatsApp: 0740854527
வலைத்தளம்: https://www.presidentsfund.gov.lk/
Facebook: https://www.facebook.com/president.fund
ஜனாதிபதி நிதியத்தின் புதிய செயல் முறைக்கேற்ப புதிய அமைப்பினை அறிமுகப்படுத்தியதற்கு பின்னரான முதல் மருத்துவ உதவித்தொகை இன்று (2025.03.14) வழங்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கும் மருத்துவ உதவித் திட்டம் 2025.02.07 முதல் பிரதேச மட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் பொதுமக்கள் தங்களது பிரதேச செயலாளர் அலுவலகம் வழியாக விண்ணப்பிக்க வசதி பெற்றுள்ளனர்.
இதற்கமைவாக, 2025.02.21 அன்று மாத்தறை மாவட்டத்திலுள்ள பஸ்கொட பிரதேச செயலாளர் அலுவலகம் மூலம் கணினி அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உரிய கட்டணங்கள் இன்று பஸ்கொட பிரதேச செயலாளர் அலுவலக அதிகாரிகளால் வழங்கப்பட்டன.
🔴 2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு கூடியது
🔴 பிரதேச மட்டத்தில் ஜனாதிபதி நிதிய சேவைகளை வழங்க அனுமதி
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான ஜனாதிபதி நிதியிலிருந்து பணியாளர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கவும் திட்டம்
நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி(ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் 28 ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகள் உண்மையாக மக்களைச் சென்றடையும் வகையில் வினைத்திறனான சேவைகளை வழங்கும் வகையில் திட்டம் தயாரித்தல், புதிய யோசனைகள் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலானோர் காத்திருப்பது குறித்து இதன் போது ஆராயப்பட்டது. இதற்கான தீர்வாக கடமை நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் அந்த சேவையை முன்னெடுக்கும் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்குவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. தற்பொழுது இந்த முறைமை கராபிடிய மருத்துவமனையில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது.எதிர்காலத்தில் அதனை தேசிய மருத்துவமனை, கண்டி பெரியாஸ்பத்திரி மற்றும் ரிச்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனை என்பவற்றிலும் முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வசதிகளை வழங்குவதை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளை மையமாகக் கொண்டு புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் தற்பொழுது முன்னெடுக்கப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொசான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயக்கொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்னே மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
🔴 ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது
🔴 புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்
மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க.
இதன்படி, கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகளை நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐந்து பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு இது தொடர்பில் முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கும் வகையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இணையம் மூலமான கலந்துரையாடலின் போதே இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி நிதியத்திற்கு புதிய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வலையமைப்பு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் ஊடாக மக்களுக்கு மிகவும் வினைத்திறன் மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக செயலாற்றி வருவதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே தெரிவித்தார்.
இதனூடாக எவராயினும் தமது பிரதேச செயலகத்தின் ஊடாக நோய்க்கு அமைவான கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், அது தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகத்தினால் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.
நோயாளர்களை தெரிவு செய்யும் முறை, அவர்களின் ஆவணங்களை தயாரிக்கும் முறை, ஜனாதிபதி நிதியத்தின் பொறுப்பு என்பன தொடர்பில் இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
Top