அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்புரையுடனும், ஜனாதிபதியின் செயலாளரின் வழிகாட்டலுடனும், இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் நிதி சிக்கல்களில் வாழும் கற்கும் திறன் கொண்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை இனங்கண்டு அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதற்காக ஜனாதிபதி நிதியம் மேற்கண்ட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கிணங்க, அவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறும் வரையில் பொருளாதாரச் சிக்கல்களால் கற்றல் நடவடிக்கைகளை பாதியில் நிறுத்தாமல் ஓரளவு நிவாரணம் வழங்கி அவர்களின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவிகரமாக இந்த புலமைப்பரிசில் திட்டம் பயன்படுத்தப்படுகிறது.
அதற்கு இணங்க, மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விசேட கோரிக்கைகளின் காரணமாக, புலமைப்பரிசில் பெறுவோருக்கு ஏற்கனவே செலுத்தும் மாதாந்த கொடுப்பனவான ரூபா 5000.00 (இதுவரை 10 தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன) பெப்ரவரி 2024 முதல் அதிகரிக்க ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்துள்ளார். அதன்படி, மாதாந்த உதவித்தொகையாக ரூ.6000 ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் 2021/2022 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி நிதிய உதவித்தொகை திட்டத்தின் மாணவர்களுக்கு 2024 பெப்ரவரி முதல் G.C.E A/L பரீட்சைக்கு அமரும் வரை வழங்கப்படும்.
2024 ஆம் ஆண்டு புதுவருட ஆரம்ப விழாவை முன்னிட்டு ஜனாதிபதி நிதியத்தால் நடாத்தப்பட்ட பிரித் பிரசங்கத்தின் சிறப்பம்சங்கள்
ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த நோயாளர்களின் வசதிக்காக SMS விழிப்பூட்டல் சேவை செயற்படுத்தப்பட்டுள்ளது.
உங்களால் சமர்ப்பிக்கப்படும் மருத்துவ உதவிகளுக்கான விண்ணப்பம் தொடர்பாக துரிதமாக செலுத்தல்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் சனாதிபதி நிதியத்துக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் திருத்தப்பட்டுள்ளதால் 2023.03.20 ஆந் திகதி தொடக்கம் புதிய விண்ணப்பம் மூலம் சமர்ப்பிக்கப்படும் வேண்டுகோள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை தயவுடன் அறிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். புதிய விண்ணப்பம் இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்வதற்காக
உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகிறது. விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்த பின், குறித்த மாணவர்கள் 2023 டிசம்பர் 22 ஆம் திகதிக்கு முன்னர் தாங்கள் பரீ்ட்சை எழுதிய பாடசாலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.
Top