P R E S I D E N T S F U N D
  • prefund@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

– தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுபெற்ற 361 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 ஊக்குவிப்பு வழங்கப்பட்டது

கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மாவட்ட அளவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற திறமைசாலிகளை கௌரவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் தொடங்கியுள்ளது.அதன்படி, தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) காலை ருகுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 06 பாடத்திட்டங்களின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற 10 மாணவர்கள் வீதம் 361 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதற்காக ஜனாதிபதி நிதியம் 36.1 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, ஜனாதிபதி நிதியத்தை முறைப்படுத்தவும், அதன் சேவைகளை விஸ்தரிக்கவும், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த கால நடைமுறைகளில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு,நன்மைகள் பெறத் தகுதியானவர்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும், பிராந்திய ரீதியாக பரவலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முக்கிய கருவி கல்விதான் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் , பிள்ளைகள் இந்த சலுகையை முறையாகப் பயன்படுத்தி, சிறந்த கல்வியாளர்களாகவும், நல்ல பிரஜைகளாகவும் வாழ்க்கையை வெற்றிபெற்று அதன் மூலம் நாட்டையும் தேசத்தையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் மேலும் கூறினார்.

இதுவரை இருந்த ஜனாதிபதியின் நிதியை தற்போதைய அரசாங்கம் மக்கள் நிதியாக மாற்ற முடிந்துள்ளதாகவும், மக்களின் நல்வாழ்வுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனமாக இந்த நிறுவனத்தை மாற்ற முடிந்துள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

அரசியல் அடியாட்களின் சிகிச்சை மற்றும் பயணத்திற்காக ஜனாதிபதி நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது அது ஒரு பொது நல நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

இந்த புலமைப்பரிசில் பெற்று இலவசக் கல்வியின் ஊடாக முன்னேற்றம் அடையும் மாணவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, எதிர்காலத் தலைவராக மாறிய பிறகு, இந்த நாட்டிற்கும் அதன் பிரஜைகளுக்கும் வழங்க வேண்டிய சேவைகளைப் புறக்கணிக்கக்கூடாது என்றும், பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து கற்றுக்கொண்டு நாட்டையோ அல்லது மக்களையோ திருடவோ அல்லது ஏமாற்றவோ கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் நினைவுபடுத்தினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், உலகைக் காண்பதற்காக பறந்து செல்வதற்காக கல்வி எனும் சிறகுகளை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் என்றும், கல்வி அவர்களை மனிதாபிமான குடிமக்களாக மாற்ற உதவும் என்றும் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கல்விக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், ஜனாதிபதி இதற்காகச் செயல்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் கல்வியில் திறமையான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கல்வி மூலம் மாணவர்களை வளப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இங்குள்ளவர்களில் பலர் இலங்கையையோ அல்லது உலகையோ ஆளும் பல இடங்களில் இருப்பார்கள் என்றும், அவர்கள் மனிதாபிமான குடிமக்களாக இல்லாவிட்டால், கல்வியில் நாம் செய்யும் முதலீடு சிறந்த பலனைத் தராது என்றும் அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் மேலும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார சிரமங்களைக் கொண்ட மாணவர்கள் உயர்கல்வியை வெற்றிகரமாகத் தொடரவும் வாழ்க்கையில் வெற்றி பெறவும் இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளதாகவும் அதற்காக ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி நிதியத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக நன்றியுரையாற்றிய காலி, சவுத்லெண்ட் கல்லூரி மாணவி சித்மினி மதநாயக்க கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எல்.எம்.அபேவிக்ரம, லால் பிரேமநாத், அரவிந்த செனரத், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் பி.ஏ. ஜெயந்த, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பிமல் சில்வா மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள்,அரசு அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு விஸ்தரிப்பது தொடர்பான விசேட செயலமர்வு தொடரின் தென் மாகாண செயலமர்வு நேற்று (05) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயல்முறை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் பரவலாக்க ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி,பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பணியாற்றும் துறைசார் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிநெறி நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு அண்மையில் வட மாகாணத்தில் இந்தப் பணி தொடங்கப்பட்டது.

அதன் மூன்றாவது கட்டமாக தென் மாகாண செயலமர்வு நேற்று(05) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் வகிபாகம் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதிய செயலாளருமான ரோஷன் கமகே, கலந்து கொண்டோருக்கு விளக்கம் அளித்தார். கணினி கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்தும் மருத்துவ உதவி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது முதல் அங்கீகாரம் வழங்குவது வரை மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் ஒப்புதலுக்குப் பிறகு மருத்துவ உதவி செலுத்தும் செயல்முறை குறித்து ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இதன் போது தெளிவுபடுத்தினார்கள்.

அத்தோடு,துறைசார் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், பங்கேற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

வறுமை ஒழிப்புக்கான நிவாரணங்கள், கல்விப் புலமைப்பரிசில் வழங்கல், கல்வியில் சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவித்தல் , விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவுகள், தேசிய அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களை கௌரவித்தல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தற்போது ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படுகின்றன.

47 ஆண்டுகளாக கொழும்பிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும், இந்த புதிய திட்டத்தின் கீழ் எந்தவொரு பிரதேச செயலகத்தின் மூலமும் நன்மைகள் எதிர்பார்க்கும் மக்களுக்கு தற்பொழுது கிடைக்கின்றன.

ஜனாதிபதி தலைமையிலான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு எடுத்த முடிவின் பயனாக, மக்களுக்கு இந்த வசதி கிடைப்பதோடு அதிகமான மக்களுக்கு நன்மைகள் பெற்றுக் கொடுக்கவும் சிறந்த சேவைகளை வழங்கவும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் இதன் வாயிலாக குறைக்கப்படுகிறது.

மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன, காலி மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் பிமல் சில்வா உள்ளடங்களாக பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 100 ற்கும் மேற்பட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் பிரதேச செயலகங்கள் வரை பரவலாக்கப்பட்டதன் காரணமாக, அதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேவேளையில், கணினி அடிப்படையிலான புதிய இணைய வழி முறைமை (Online System) தொடர்பில் பிரதேச செயலகங்களின் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவூட்டல் மற்றும் பயிற்சி அளிப்பது அத்தியாவசியமாகியுள்ளது.

அதன் அடுத்த கட்டமாக, 2025.07.05 அன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில், தென் மாகாணத்தில் உள்ள காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஜனாதிபதி நிதியம் தொடர்பான பணிகளில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், தென் மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்குவது, நவீனமயப்படுத்தப்பட்ட இணைய வழி முறைமைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்கு தேவையான அறிவையும் பயிற்சியையும் வழங்குவது எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பை மையமாகக் கொண்டு குறிப்பிட்ட ஒரு சிலருக்கே நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாகச் செயற்படுத்துவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான ஆளும் சபையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காக, இவ்வாறான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது மேல் மற்றும் வட மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு விஸ்தரிப்பது தொடர்பான விசேட செயலமர்வு தொடரின் தென் மாகாண செயலமர்வு நேற்று (05) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயல்முறை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் பரவலாக்க ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி,பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பணியாற்றும் துறைசார் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிநெறி நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு அண்மையில் வட மாகாணத்தில் இந்தப் பணி தொடங்கப்பட்டது.

அதன் மூன்றாவது கட்டமாக தென் மாகாண செயலமர்வு நேற்று(05) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் வகிபாகம் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதிய செயலாளருமான ரோஷன் கமகே, கலந்து கொண்டோருக்கு விளக்கம் அளித்தார். கணினி கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்தும் மருத்துவ உதவி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது முதல் அங்கீகாரம் வழங்குவது வரை மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் ஒப்புதலுக்குப் பிறகு மருத்துவ உதவி செலுத்தும் செயல்முறை குறித்து ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இதன் போது தெளிவுபடுத்தினார்கள்.

அத்தோடு,துறைசார் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், பங்கேற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

வறுமை ஒழிப்புக்கான நிவாரணங்கள், கல்விப் புலமைப்பரிசில் வழங்கல், கல்வியில் சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவித்தல் , விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவுகள், தேசிய அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களை கௌரவித்தல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தற்போது ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படுகின்றன.

47 ஆண்டுகளாக கொழும்பிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும், இந்த புதிய திட்டத்தின் கீழ் எந்தவொரு பிரதேச செயலகத்தின் மூலமும் நன்மைகள் எதிர்பார்க்கும் மக்களுக்கு தற்பொழுது கிடைக்கின்றன.

ஜனாதிபதி தலைமையிலான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு எடுத்த முடிவின் பயனாக, மக்களுக்கு இந்த வசதி கிடைப்பதோடு அதிகமான மக்களுக்கு நன்மைகள் பெற்றுக் கொடுக்கவும் சிறந்த சேவைகளை வழங்கவும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் இதன் வாயிலாக குறைக்கப்படுகிறது.

மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன, காலி மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் பிமல் சில்வா உள்ளடங்களாக பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 100 ற்கும் மேற்பட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மக்களுக்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி நிதியம், நெருக்கடியான தருணங்களில் உதவிக்கு мұட்படும் கலைஞர்களுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரபல பாடகர் இஷாக் முகிதீன் பெக் அவர்களின் எதிர்வரும் மருத்துவ علاஜங்களுக்கு தேவையான நிதியுதவி அண்மையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ (டாக்டர்) ஹினிதும சுனில் சேனவிரத்ன அவர்களும், பிற முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன்படி வட மாகாணத்தில் 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு, இன்று (22) முற்பகல் இரணைமடு நெலும் பியச கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உயர் சித்தி பெற்ற முதல் 10 மாணவர்கள் வீதம், ஒரு மாவட்டத்தில் இருந்து 60 மாணவர்கள் தெரிவு செய்து, 300 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களிலும் நடைமுறைப்படவுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதி நிதியத்தினை முறைமைப்படுத்தி, அதன் சேவைகளை விஸ்தரிப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த கால நடைமுறைகளில் இருந்த தவறுகளை சீர்செய்து, இன்று அதன் நன்மைகளைப் பெற வேண்டியவர்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை செயற்திறன் மிக்க வகையில் மாற்றுவதற்கு அதனை டிஜிட்டல் மயப்படுத்தவும், அதன் சேவைகளை பிரதேச ரீதியாகப் பரவலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிட்டார்.

பிள்ளைகள் வாழ்க்கையை வெல்வதற்கு கல்வியே பிரதான கருவியாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிள்ளைகள் தமக்கு கிடைக்கும் இந்த நன்மைகளை சரியாகப் பயன்படுத்தி, கல்வியில் சிறந்து விளங்குவதோடு, சிறந்த பிரஜைகளாக வாழ்வில் வெற்றி பெறுவதுடன் அதேபோன்று, நாடும் தேசமும் வெற்றிபெறும் வகையில் பிள்ளைகள் செயற்பட வேண்டும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும் இங்கு உரையாற்றினார்கள்.

யாழ் இந்துக் கல்லூரி மாணவன் அபிஷேக் இங்கு நன்றியுரை ஆற்றியதுடன், பொருளாதாரத்தில் சிரமம் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், அதற்காக ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி நிதியத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கே. இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, எம். ஜகதீஸ்வரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, உட்பட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் பிரதேச செயலக மட்டத்தில் வழங்கும் செயற்பாட்டை, உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (21) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் கீழ் மட்டத்திற்கு பரவலாக்குவதற்கான சிறப்பு செயலமர்வுத் தொடரின், வட மாகாண செயலமர்வு இதற்கு இணையாக இன்று (21) நாள் முழுவதும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தில் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல், கடந்த பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களாலும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் இவ்வாறு பரவலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வறுமை ஒழிப்பு நிவாரணங்கள்,கல்விப் புலமைப்பரிசில் வழங்கல், கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை பாராட்டுதல், விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை, தேசிய அளவில் அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களைப் பாராட்டுதல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும். ஆகவே, இந்த வேலைத்திட்டத்துடன் 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், பிரதேச செயலகங்கள் மூலம் இலங்கையின் அணைத்து பிரதேசங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தலைமையிலான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு மேற்கொண்ட தீர்மானத்தின் படி, பொதுமக்களுக்கு இந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக அதிகமான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் செயற்திறன்மிக்க வகையில் சேவைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் ஊடாக ஜனாதிபதி நிதியத்தை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை கட்டுப்படுத்துகின்றன.

ஜனாதிபதி நிதியத்தின் வகிபாகம் குறித்து , ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, இங்கு வருகை தந்தவர்களுக்கு விளக்கமளித்தார்.

இதன்போது, அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணையவழி ஊடாக வழங்குதல், வட மாகாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர், யாழ்.மாவட்ட செயலாளர் உட்பட வடமாகாண அரச அதிகாரிகள், ஜனாதிபதி நிதியத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை (22) கிளிநொச்சியில் நடைபெறும்.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

மாகாண ரீதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்வு, நாளை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டுவதற்கு, ஜனாதிபதி நிதியம் தயாராகி வருகின்றது.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.

அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் தெரிவு, மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டமாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 2025 ஜூன் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படவுள்ளனர்.

இதேவேளை, ஏனைய மாகாணங்களிலும் விரைவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில் வழங்கப்படும்.

ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் இவ்வாறு விரிவுபடுத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, வறுமை ஒழிப்பு நிவாரணங்கள், கல்விப் புலமைப்பரிசில் வழங்குதல், கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை பாராட்டுதல், விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை, தேசிய அளவில் அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களைப் பாராட்டுதல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கு நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாக இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும்.

இந்த வேலைத்திட்டத்துடன் 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், இலங்கையின் அணைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தலைமையிலான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு மேற்கொண்ட தீர்மானத்தின் படி, பொதுமக்களுக்கு இந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக அதிகமான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதன் ஊடாக ஜனாதிபதி நிதியத்தை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

Top